follow the truth

follow the truth

September, 20, 2024
HomeTOP1ONMAX DT இயக்குநர்கள் குழுவின் கணக்குகளில் இருந்த 80 கோடி குறித்து விசாரணை

ONMAX DT இயக்குநர்கள் குழுவின் கணக்குகளில் இருந்த 80 கோடி குறித்து விசாரணை

Published on

பிரமிட் திட்டங்களை இயக்குவதாக குற்றம் சாட்டப்பட்ட ONMAX DT (PVT) LTD இன் இயக்குநர்கள் குழுவின் கணக்குகளில் 80 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணம் இருப்பதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நேற்று (12) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் அறிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் எழுத்துமூலமாக செய்த முறைப்பாட்டுக்கு அமைய இந்த விசாரணை நடத்தப்பட்டதாகவும், அதன் பிரகாரம் 5 உறுப்பினர்களின் கணக்குகளில் பணம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றில் தெரிவித்துள்ளது.

கஹந்தவ ஆரச்சிலகே அதுல இந்திக்க சம்பத், சிங்கள பேடிகே கயாஷான் அபேரத்ன, லெந்துவகே சம்பத் சந்தருவன், கலபட விதான ஆராச்சிலகே சாரங்க ரந்திக ஜயதிஸ்ஸ, மல்லவ அப்புஹாமிலாகே தனஞ்சய ஜயான் ஆகியோரின் கணக்குகள் இவை என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்தது.

ஆனால், குறித்த நிறுவனத்தின் கணக்கில் கணிசமான பண இருப்பு இல்லை என்று தெரிவித்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர், இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடத்தப்படும் என நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பேலியகொட மெனிங் சந்தை மூடப்பட மாட்டாது

ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டாலும் பேலியகொட மெனிங் சந்தை அடுத்த இரண்டு நாட்களுக்கு மூடப்படாது என பேலியகொட மத்திய மீன்...

தனியார் பிணைமுறி உரிமையாளர்களுடனான பேச்சுவார்த்தை வெற்றி

தனியார் பிணைமுறி உரிமையாளர்களுடனான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ளதோடு நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து விடுவிப்பது தொடர்பான அனைத்து பேச்சுவார்த்தைகளும் வெற்றிகரமாக...

தபால் ஊழியர்கள் இருவரின் சேவைகள் இடைநிறுத்தம்

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் தொடர்பான கடமைகளை புறக்கணித்தமை காரணமாக தபால் ஊழியர்கள் இருவரின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஊழியர்கள்...