follow the truth

follow the truth

September, 20, 2024
HomeTOP1குடியிருப்பு மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான வர்த்தமானி வெளியானது

குடியிருப்பு மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான வர்த்தமானி வெளியானது

Published on

குடியிருப்பு மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.

அதன்படி 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நாணய பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சராக ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.

நாட்டின் 15வது குடியிருப்பு மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021 ஆம் ஆண்டில் நடத்த திட்டமிடப்பட்டது.

ஆனால் கொவிட் -19 தொற்றுநோய் காரணமாக அதை ஒத்திவைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.

இலங்கையில் முதலாவது சனத்தொகை மற்றும் குடியிருப்பு கணக்கெடுப்பு 1871 இல் நடத்தப்பட்டது, கடைசியாக சனத்தொகை மற்றும் குடியிருப்பு கணக்கெடுப்பு 2012 இல் நடத்தப்பட்டது.

குடியிருப்பு மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பொதுவாக பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும் பணிகள் நாளை காலை முதல் ஆரம்பிக்கப்படும்...

உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை

ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த...

ஜனாதிபதித் தேர்தல் – பாதுகாப்பிற்காக முப்படைகளும் இணக்கம்

ஜனாதிபதித் தேர்தலின் போது அமுல்படுத்தப்பட வேண்டிய இறுதி பாதுகாப்பு வேலைத்திட்டம் பொலிஸ்மா அதிபர்களுக்கு இன்று (19) வழங்கப்பட்டதாக பொது...