follow the truth

follow the truth

September, 23, 2024
Homeஉள்நாடுகாணாமல் போன 65 இலங்கை அகதிகள் குறித்து தமிழ்நாடு பொலிஸார் இருட்டடிப்பு

காணாமல் போன 65 இலங்கை அகதிகள் குறித்து தமிழ்நாடு பொலிஸார் இருட்டடிப்பு

Published on

செப்டெம்பர் மாதம் தமிழ்நாட்டு அகதி முகாம்களில் இருந்தும் ஏனைய தனியார் குடியிருப்புகளிலிருந்தும் காணாமல் போன 65 இலங்கை அகதிகளின் நிலை குறித்து தமிழக பொலிஸார் இன்னும் இருட்டில் தவிப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மாலைதீவுக்கு அருகிலுள்ள டியாகோ கார்சியா என்ற தீவில் சிக்கித் தவிக்கும் அகதிகள் குறித்து இரண்டு வாரங்களுக்கு முன்பு செய்திகள் வெளியான போதிலும் அவர்களின் அடையாளங்கள் குறித்து இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்று தமிழக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

இலங்கை அகதிகள் இந்த ஆண்டு ஒக்டோபர் முதல் வாரத்தில் கேரளா கடற்கரையிலிருந்து சட்டவிரோத படகு மூலம் கனடாவுக்குச் சென்றதாக நம்பப்படுகிறது. அவர்கள் தங்கள் முதல் கடல் பயணத்தில் தென்னாப்பிரிக்காவை அடைவதற்காக இந்தியப் பெருங்கடலைக் கடந்ததாகக் கூறப்படுகிறது. அறிவிக்கப்பட்ட பயணத் திட்டத்தின்படி, தென்னாப்பிரிக்காவில் இருந்து, அவர்கள் மேலும் சட்டவிரோத படகு மூலம் கடல் வழியாக கனடாவுக்குச் செல்வார்கள்.

‘இதுவரை அவர்களின் நிலை குறித்து எந்த தகவலும் இல்லை. அவர்கள் டியாகோ கார்சியாவில் காணப்பட்டதாக உறுதி செய்யப்படாத செய்திகளைத் தொடர்ந்து தமிழ்நாடு காவல்துறை இன்டர்போலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் இல்லை, ‘என்று வட்டாரங்கள் குறிப்பிட்டன.

தமிழகத்தில் உள்ள 108 அகதிகள் முகாம்களில் சுமார் 65,000 இலங்கை அகதிகள் தங்கியிருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க தெரிவு

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க 5,740,179 வாக்குகளைப்...

ஊரடங்கு சட்டம் 12 மணிக்கு தளர்த்தப்படும்

நாடளாவிய ரீதியில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் இன்று (22) மதியம் 12 மணிக்கு தளர்த்தப்படும் என...

ஊரடங்கு நீட்டிக்கப்படும்

இன்று (22) காலை 6 மணி வரை அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மேலும் நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு சட்டம் இன்று...