follow the truth

follow the truth

September, 20, 2024
HomeTOP1போக்குவரத்து தொடர்பான தேசிய கொள்கையில் மாற்றம்

போக்குவரத்து தொடர்பான தேசிய கொள்கையில் மாற்றம்

Published on

போக்குவரத்து தொடர்பான தேசிய கொள்கையை தயாரிப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகளை எதிர்வரும் நவம்பர் மாதம் ஆரம்பிப்பதாக அமைச்சர் பந்துல குணவர்தன உறுதியளித்ததாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

பயணிகள் போக்குவரத்து தொடர்பான தேசிய கொள்கை தயாரிப்பது தொடர்பில் அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஒன்றிணைந்த போக்குவரத்து தொழிற்சங்க நிலையத்தின் தலைவர் சம்பத் ரணசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“போக்குவரத்து தொடர்பில் தேசிய கொள்கை இல்லாதது இங்குள்ள பிரதான பிரச்சினையாகும். இது தொடர்பில் தலைமை தொழிற்சங்கத்தினால் அமைச்சருக்கு அறிவிக்கப்பட்டது.

25 வருட கால தேசிய கொள்கையின் ஊடாக இந்த நாட்டில் நாளைய போக்குவரத்து திட்டத்தை உருவாக்க முடியாது. எனவே, நாட்டுக்கு ஏற்ற தரமான பயணிகள் போக்குவரத்து சேவையை பேணுவதற்கு புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நவீன போக்குவரத்து திட்டத்தை உருவாக்க புதிய தேசிய கொள்கையை உருவாக்குவதாக அமைச்சர் வாக்குறுதி அளித்தார்.

நவம்பரில் தேசிய கொள்கையை உருவாக்குவதற்கான அடித்தளத்தை அமைப்பதாக அவர் எங்களிடம் ஒப்புக்கொண்டார்…” எனத் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தெஹிவளையில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் பலி

தெஹிவளை பகுதியில் இன்று (20) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார். தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடவத்த...

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் பெயரில் போலிச் செய்தி. மக்களே அவதானம்.

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை ஒரு அரசியல் நிலைப்பாட்டில் இருப்பதாக எங்கள் லோகோ, எங்கள் சமூக வலைதளன...

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும் பணிகள் நாளை காலை முதல் ஆரம்பிக்கப்படும்...