இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான ரி – 20 போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.
உலகக்கிண்ண ரி -20 கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின.
நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து 171 ஓட்டங்களைப் பெற்றது.
பின்னர் 172 என்ற வெற்றியில்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 18.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.