சர்வதேச நாணய நிதியம் 03 பில்லியன் அமெரிக்க டொலர் திட்டத்தில் பாகிஸ்தானுடன் பணியாளர் மட்ட ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச நாணய நிதியத்தின் சபையின் அனுமதி ஜூலை மாதம் பெறப்பட உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
சுமார் 08 மாத கால தாமதத்திற்குப் பின்னர் பாகிஸ்தான் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கையை எட்டியுள்ளது.