அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட ‘அஸ்வசும’ திட்டத்திற்கு இதுவரை 188,794 முறைப்பாடுகளும் 3,304 ஆட்சேபனைகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த வேலைத்திட்டம் தொடர்பான முறைப்பாடுகள் அல்லது தகவல்களை அறிந்து கொள்வதற்காக 1924 என்ற அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.