உத்தேச மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களைப் பெறுவதற்காக இன்று (27) விசேட மக்கள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இதன்படி, இன்று காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் மக்கள் கருத்து கேட்பு அமர்வு நடைபெறும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள மின் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிக்க வாய்ப்பு உள்ளது.
தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் உட்பட எவருக்கும் இதற்கான கருத்துக்களை வழங்க முடியும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.