follow the truth

follow the truth

September, 21, 2024
HomeTOP1பொலிஸ்மா அதிபரின் பணி நீட்டிப்பு இன்றுடன் முடிவடைகிறது

பொலிஸ்மா அதிபரின் பணி நீட்டிப்பு இன்றுடன் முடிவடைகிறது

Published on

தற்போதைய பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு வழங்கப்பட்ட சேவை நீடிப்பு இன்றுடன் நிறைவடையவுள்ளது.

பொலிஸ் மா அதிபர் எதிர்வரும் மார்ச் மாதம் 26ஆம் திகதி ஓய்வுபெறவிருந்த போதிலும், அவரின் சேவையை மூன்று மாதங்களுக்கு நீடிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தார்.

எவ்வாறாயினும், அந்த கால அவகாசம் இன்றுடன் நிறைவடைவதால், அதன் பின்னர் புதிய பொலிஸ் மா அதிபர் நியமிக்கப்பட வேண்டும்.

எவ்வாறாயினும், இதுவரையில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும், வெளிநாட்டில் உள்ள ஜனாதிபதி, நாடு திரும்பிய பின்னர் தீர்மானம் எடுப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபர் பதவி தொடர்பான ஜனாதிபதியின் பரிந்துரை அரசியலமைப்பு சபையில் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

அடுத்த பொலிஸ் மா அதிபர் பதவிக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களான தேஷ்பந்து தென்னகோன், நிலந்த ஜயவர்தன, லலித் பதிநாயக்க, பிரியந்த வீரசூரிய மற்றும் அஜித் ரோஹன ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு காலம் நிறைவு

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு காலம் உத்தியோகபூர்வமாக நிறைவடைந்துள்ளது. இதேவேளை ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கெடுப்பில் பிற்பகல் 3 மணிவரையிலான நிலவரத்தின்படி,...

1.00 மணி வரை சில மாவட்டங்களில் பதிவான வாக்களிப்பு வீதம்

நாட்டின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான 9வது ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று (21)...

ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க தனது வாக்கினை செலுத்தினார்

2024 ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளாரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ரோயல் கல்லூரியில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் இன்று...