லங்கா சதொச நிறுவனத்தில் இடம்பெற்ற வௌ்ளைப்பூண்டு மோசடி தொடர்பில் நேற்று கைது செய்யப்பட்ட சந்தேகநபர் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபர் இன்று (23) வத்தளை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பொது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மோசடியான முறையில் வௌ்ளைப்பூண்டை கொள்வனவு செய்த நபரின் மகனே பம்பலப்பிட்டியில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
பம்பலப்பிட்டியை சேர்ந்த 25 வயதான இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ குறிப்பிட்டார்.
1,17,19,520 ரூபா பணத்தை மோசடி செய்வதற்காக போலி ஆவணம் தயாரித்தமை, அதற்கு ஒத்துழைப்பு வழங்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.