follow the truth

follow the truth

September, 22, 2024
Homeஉள்நாடுவௌ்ளைப்பூண்டு மோசடி - வர்த்தகரின் மகன் விளக்கமறியலில்

வௌ்ளைப்பூண்டு மோசடி – வர்த்தகரின் மகன் விளக்கமறியலில்

Published on

லங்கா சதொச நிறுவனத்தில் இடம்பெற்ற வௌ்ளைப்பூண்டு மோசடி தொடர்பில் நேற்று கைது செய்யப்பட்ட சந்தேகநபர் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபர் இன்று (23) வத்தளை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பொது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மோசடியான முறையில் வௌ்ளைப்பூண்டை கொள்வனவு செய்த நபரின் மகனே பம்பலப்பிட்டியில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

பம்பலப்பிட்டியை சேர்ந்த 25 வயதான இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ குறிப்பிட்டார்.

1,17,19,520 ரூபா பணத்தை மோசடி செய்வதற்காக போலி ஆவணம் தயாரித்தமை, அதற்கு ஒத்துழைப்பு வழங்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க தெரிவு

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க 5,740,179 வாக்குகளைப்...

ஊரடங்கு சட்டம் 12 மணிக்கு தளர்த்தப்படும்

நாடளாவிய ரீதியில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் இன்று (22) மதியம் 12 மணிக்கு தளர்த்தப்படும் என...

ஊரடங்கு நீட்டிக்கப்படும்

இன்று (22) காலை 6 மணி வரை அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மேலும் நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு சட்டம் இன்று...