இலங்கையில் பயன்படுத்தப்படும் இரண்டு வகையான மருந்துகளின் தரத்தை மீள் பரிசோதிக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நோயாளிகளின் மரணம் மற்றும் அந்த மருந்துகளை உட்கொண்டதன் பின்னர் பல்வேறு ஒவ்வாமைகள் ஏற்பட்டதை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும், இந்திய கடன் வசதியின் கீழ் இந்த இரண்டு வகையான மருந்துகளும் இறக்குமதி செய்யப்பட்டதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
மீண்டும் பரிசோதிக்கப்படவிருந்த மயக்க ஊசி மருந்தை பெற்றுக் கொண்ட இரண்டு பெண்கள் கடந்த மாதம் பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.