follow the truth

follow the truth

September, 19, 2024
Homeஉலகம்சீனாவில் மீண்டும் தலைதூக்கும் புதிய வகை கொரோனா

சீனாவில் மீண்டும் தலைதூக்கும் புதிய வகை கொரோனா

Published on

சீனாவில் மீண்டும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை காரணமாக வடக்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

நேற்று மாத்திரம் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக மீண்டும் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன், நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தலைநகர் பீஜிங் உட்பட சுமார் ஐந்து மாகாணங்கள் மற்றும் பிராந்தியங்களில் பலர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாகவும், வேறு மாகாணங்களுக்கு செல்ல விரும்புவோர் கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழை உடன் வைத்திருத்தல் அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களிடம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவும், சுற்றலாத்தலங்களை உடனடியாக மூடவும் மாகாண அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நிலக்கரி இறக்குமதிக்காக மொங்கோலியாவில் இருந்து வருகை தந்தவர்கள் மூலம் சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தலை நடத்தக் கோரி பங்களாதேஷில் ஆர்ப்பாட்டம்

ஜனநாய ரீதியிலான அரசியல் பரிமாற்றம் ஒன்றைக் கோரி பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் ஆயிரக்கணக்கான செயற்பாட்டாளர்கள் மற்றும் எதிர்க்கட்சியான பங்களாதேஷ்...

சிம்பாப்வேயில் கடும் வறட்சி – 200 யானைகளை கொன்று மக்களுக்கு உணவளிக்க திட்டம்

கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் வாட்டி வதைத்து வரும் கடும் வறட்சி காரணமாக ஆபிரிக்க நாடான சிம்பாப்வேயில்...

புதிய வகை கொவிட் தற்போது 27 நாடுகளில் பரவல்

எக்ஸ். இ. சி. புதிய வகை கொவிட் தற்போது 27 நாடுகளில் பரவியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. போலந்து,...