முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனால் முன்வைக்கப்பட்ட மேன்முறையீட்டு மனுவை அடுத்த வருட பெப்ரவரி மாதம் 03ஆம் திகதி விசாரணைக்கு எடுக்குமாறு உயர் நீதிமன்றம் இன்று (22) உத்தரவிட்டுள்ளது.
வில்பத்து வனப்பகுதியை அண்மித்த பிரதேசங்களிலுள்ள கல்லாறு காட்டுப்பகுதியில் தேவையற்ற ரீதியில் நிர்மாணங்களை மேற்கொண்டதாக அவர் மீது முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிஷாட் பதியுதீன் எம்.பிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள உத்தரவை நீக்குமாறு கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
வில்பத்து வனப்பகுதியை அண்மித்த கல்லாறு மற்றும் மரிச்சுக்கட்டி ஆகிய வனப்பகுதிகளில் தேவையின்றி கட்டட நிர்மாணங்களை மேற்கொண்டமைக்கு எதிராக சுற்றுச் சூழல் நீதி மையத்தினால் கடந்த 2015ஆம் ஆண்டு அப்போது அமைச்சராக இருந்த ரிஷாட் பதியுதீன் எம்.பிக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.