follow the truth

follow the truth

September, 22, 2024
Homeஉள்நாடுசுற்றுலா செல்வதைத் தவிர்க்கவும்! உயிர்களை இழக்க நேரிடலாம்

சுற்றுலா செல்வதைத் தவிர்க்கவும்! உயிர்களை இழக்க நேரிடலாம்

Published on

வெல்லவாய – எல்லவெல ஆற்றில் இன்று (20) பிற்பகல் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர். இதனையடுத்து நீர்வீழ்ச்சிகளில் நீராடச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாகாணங்களுக்கிடையிலான தடைகள் நீடிக்கப்பட்டாலும் சுற்றுலாப் பயணங்கள் தொடர்வதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இந்த நிலையில்இ கட்டுப்பாடுகளை மீறி சுற்றுலாச் செல்வதும்இ அத்தியாவசிய பயணங்களை முன்னெடுப்பதும் உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கட்டுப்பாடுகளை பொதுமக்கள் தொடர்ந்து கடைபிடிக்காவிடின் மீண்டும் கொவிட் பரவில் தீவிரமடையக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

எனவே, அத்தியாவசிய பயணங்களைத் தவிர, சுற்றுலாப் பயணங்களைத் தவிர்த்துக் கொள்ளவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது வெல்லவாய – எல்லவெல ஆற்றில் நீராடச் சென்ற காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஊரடங்கு சட்டம் 12 மணிக்கு தளர்த்தப்படும்

நாடளாவிய ரீதியில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் இன்று (22) மதியம் 12 மணிக்கு தளர்த்தப்படும் என...

ஊரடங்கு நீட்டிக்கப்படும்

இன்று (22) காலை 6 மணி வரை அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மேலும் நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு சட்டம் இன்று...

ஊரடங்கு உத்தரவு அனுமதி குறித்து பொலிசாரின் அறிவிப்பு

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் வீதியை பயன்படுத்துவது தொடர்பில் பொலிஸ் தலைமையகம் மீண்டும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஊரடங்குச் சட்டம்...