வெல்லவாய – எல்லவெல ஆற்றில் இன்று (20) பிற்பகல் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர். இதனையடுத்து நீர்வீழ்ச்சிகளில் நீராடச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாகாணங்களுக்கிடையிலான தடைகள் நீடிக்கப்பட்டாலும் சுற்றுலாப் பயணங்கள் தொடர்வதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இந்த நிலையில்இ கட்டுப்பாடுகளை மீறி சுற்றுலாச் செல்வதும்இ அத்தியாவசிய பயணங்களை முன்னெடுப்பதும் உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கட்டுப்பாடுகளை பொதுமக்கள் தொடர்ந்து கடைபிடிக்காவிடின் மீண்டும் கொவிட் பரவில் தீவிரமடையக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே, அத்தியாவசிய பயணங்களைத் தவிர, சுற்றுலாப் பயணங்களைத் தவிர்த்துக் கொள்ளவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது வெல்லவாய – எல்லவெல ஆற்றில் நீராடச் சென்ற காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.