follow the truth

follow the truth

September, 19, 2024
Homeஉலகம்தனக்கென பிரத்தியேக செயலியை ஆரம்பித்தார் டிரம்ப்

தனக்கென பிரத்தியேக செயலியை ஆரம்பித்தார் டிரம்ப்

Published on

டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் புறக்கணிக்கப்பட்டுள்ள அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனக்கென பிரத்யேக சமூக வலைத்தளத்தை தொடங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

டிரம்ப் கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், முறைகேடு நடைபெற்றதாக குற்றஞ்சாட்டியிருந்தாா். இதுகுறித்து அவர் நாடாளுமன்றக் கலவரத்தை தூண்டியதாகக் கூறி, அவரின் டுவிட்டர், பேஸ்புக் கணக்குகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நிரந்தரமாக முடக்கியிருந்தன.

தற்போது டிரம்ப் ‘உண்மை சமூகம்’ (‘TRUTH’ Social) என்ற பெயரில் தனக்கென பிரத்தியேக சமூக வலைதளத்தை டிரம்ப் நேற்று தொடங்கி உள்ளார்.

இதுகுறித்து டிரம்ப் கூறுகையில், ‘டுவிட்டர் போன்ற வலைதளங்களில், தலிபான்கள் ஆதிக்கம் அதிகயளவில் இருக்கிறது.

‘ட்ரூத் சோஷியல்’ (‘TRUTH’ Social) மூலம் சமூக வலைத்தளங்களுக்கு இடையேயான போட்டியில் ஒரு திருப்புமுனையை உருவாக்குவோம்.

வரும் நவம்பர் மாதம் தொடக்கத்தில் நாடு முழுவதும் இந்த செயலி அறிமுகப்படுத்தப்படும்.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில், பொழுதுபோக்கு நிகழ்ச்சி, செய்திகள் கொண்ட வீடியோ சேவையையும் வழங்க திட்டமிட்டு உள்ளோம்’ என்று சுட்டிக்காட்டியுள்ளாா்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கட்டுப்பாடு

வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்படும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ அறிவித்தார். உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்க இந்த நடவடிக்கை...

தேர்தலை நடத்தக் கோரி பங்களாதேஷில் ஆர்ப்பாட்டம்

ஜனநாய ரீதியிலான அரசியல் பரிமாற்றம் ஒன்றைக் கோரி பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் ஆயிரக்கணக்கான செயற்பாட்டாளர்கள் மற்றும் எதிர்க்கட்சியான பங்களாதேஷ்...

சிம்பாப்வேயில் கடும் வறட்சி – 200 யானைகளை கொன்று மக்களுக்கு உணவளிக்க திட்டம்

கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் வாட்டி வதைத்து வரும் கடும் வறட்சி காரணமாக ஆபிரிக்க நாடான சிம்பாப்வேயில்...