பொசன் நோன்மதி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி வழங்கிய விசேட பொது மன்னிப்பின் கீழ் பல கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளனர்.
அரசியலமைப்பின் 34 வது பிரிவின்படி ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, இந்த சிறப்பு அரச மன்னிப்பு கிடைக்கும். இந்த ஜனாதிபதியின் விசேட மன்னிப்பு இந்த வருடம் மே மாதம் 22 ஆம் திகதி வரை சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ஆண் மற்றும் பெண் கைதிகளுக்கு மாத்திரமே பொருந்தும் என மேலதிக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் (ஊடகப் பேச்சாளர்) சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, ஜனாதிபதியின் விசேட பொது மன்னிப்பின் கீழ் நாளை (3) நாடளாவிய ரீதியில் உள்ள ஒவ்வொரு சிறைச்சாலையிலிருந்தும் கைதிகள் விடுவிக்கப்பட உள்ளனர்.