follow the truth

follow the truth

September, 19, 2024
HomeTOP1'புத்த மதத்தை அவமதித்த நடாஷா கைது - மதங்களுக்கு பெரும் கேடு விளைவித்த ஞானசார தேரரை...

‘புத்த மதத்தை அவமதித்த நடாஷா கைது – மதங்களுக்கு பெரும் கேடு விளைவித்த ஞானசார தேரரை என்ன செய்வது?’

Published on

பௌத்த மதத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் நடாஷா எதிரிசூரிய கைது செய்யப்பட்டால் முஸ்லிம்களையும் இந்துக்களையும் இழிவுபடுத்திய ஞானசார தேரர் தொடர்பில் என்ன செய்வது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் தனது ட்விட்டர் கணக்கில் இவ்வாறானதொரு பதிவினை பதிவிட்டிருந்தார்.

‘பௌத்த மதத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் நடாஷா எதிரிசூரிய கைது செய்யப்பட்டால் முஸ்லிம்களையும் இந்துக்களையும் இழிவுபடுத்திய ஞானசார தேரர் தொடர்பில் என்ன செய்வது?
முஸ்லிம்களின் பள்ளிவாயல்கள், கிறிஸ்தவர்களின் தேவாலயங்கள் என எரித்த ஞானசாரவின் செயலை விடவா நடஷாவின் வார்த்தைகள் மோசமானது?

மேலும், டாக்டர் ஷாபியின் வாழ்க்கையை அழித்து பொய்யான குற்றச்சாட்டுகளை சூழ்ச்சியாக செய்து நாடு முழுவதும் பரப்பி ஒரு நல்ல மனிதனின் வாழ்க்கையை சீரழித்த அயோக்கியர்களை பற்றி என்ன சொல்வது ?
குற்றவாளிகளை கைது செய்து தண்டிக்க இன்னும் நேரமுண்டு, ஜனாதிபதி விக்கிரமசிங்க அதை செய்ய வேண்டும். அதுதான் உண்மையான ஜனநாயக ஆட்சியாக இருக்கும்!’ எனத் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை

ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த...

ஜனாதிபதித் தேர்தல் – பாதுகாப்பிற்காக முப்படைகளும் இணக்கம்

ஜனாதிபதித் தேர்தலின் போது அமுல்படுத்தப்பட வேண்டிய இறுதி பாதுகாப்பு வேலைத்திட்டம் பொலிஸ்மா அதிபர்களுக்கு இன்று (19) வழங்கப்பட்டதாக பொது...

வாக்காளர் அட்டைகளை விநியோகிக்காமல் வைத்திருந்த தபால் உத்தியோகத்தர் பணி நீக்கம்

148 உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை உரிமையாளர்களுக்கு வழங்கப்படாத சம்பவம் தொடர்பில் தபால் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. புத்தளம் பகுதியிலுள்ள வர்த்தக...