சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய 200 இற்கும் குறைவான மாணவர்கள் உள்ள பாடசாலைகளை நாளை முதல் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நீண்ட நாட்களுக்கு பின்னர் நாளை பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் விளக்கமளித்து கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ ஆகியோர் ஒன்றிணைந்து நம்பிக்கைக்குரிய தீர்வை முன்வைத்துள்ளதாகக் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் எதிர்காலம் பெற்றோரின் மகிழ்ச்சி மாத்திரமல்ல, நாட்டு மக்கள் அனைவரும் சந்தோசாத்திலுள்ளனா். அந்த மகிழ்ச்சியுடன் இலட்சக்கணக்கான மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் நாளையிலிருந்து மீண்டும் ஆரம்பமாகின்றன.
மாணவர்களுக்கான சுதந்திரக் கல்விக்காக இருக்கும் உரிமையைப் பயன்படுத்திக் கொள்வதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து, சுதந்திரக் கல்விக்கான உரிமையைப் பாதுகாத்துக்கொள்வதற்காக சகலரும் கைகோர்த்துக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் தினேஷ் குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.