வெளி இடங்களில் இருந்து நுவரெலியா மாவட்டத்திற்கு வருகைத் தருவோரை உடனடியாக திருப்பி அனுப்புமாறு, நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட(Nandana Galabada) பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,
நுவரெலியா மாவட்டத்தில் கொவிட் பரவல் மற்றும் கொவிட் உயிரிழப்பு வீதம் தற்போது குறைவடைந்து வருகின்ற நிலையில், பிற மாகாணங்களிலிருந்து நுவரெலியாவிற்கு வருபவர்கள் ஊடாக மீண்டும் கொவிட் தொற்று ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளன.
இந்நிலையில், இதனைத் தடுக்கும் முகமாக குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட(Nandana Galabada) குறிப்பிட்டுள்ளார்.