follow the truth

follow the truth

October, 25, 2024
HomeTOP1மூன்று மாகாணங்களுக்கு இன்று புதிய ஆளுநர்கள் நியமனம்

மூன்று மாகாணங்களுக்கு இன்று புதிய ஆளுநர்கள் நியமனம்

Published on

வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் இன்று (17) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.

வடமேல் மாகாண ஆளுநராக முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, வடமாகாண ஆளுநராக தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், கிழக்கு மாகாண ஆளுநராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தவிர ஆளுநர் பதவிகளுக்கு முன்னாள் அமைச்சர்களான தயா கமகே மற்றும் நவீன் திஸாநாயக்க ஆகியோரின் பெயர்களும் முன்மொழியப்பட்டுள்ளன.

முன்னதாக வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களின் ஆளுநர்கள் கடந்த 15ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் அறிவித்திருந்தது.

வடமாகாண ஆளுநராக ஜீவன் தியாகராஜா, கிழக்கு மாகாண ஆளுநராக அனுராதா யஹம்பத் மற்றும் வடமேல் மாகாண ஆளுநராக வசந்த கர்ணகொட ஆகியோர் இதற்கு முன்னர் பதவிகளை வகித்து வந்தமையும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவர்கள் மீது ரோஹினி பொலிஸில் முறைப்பாடு

சமூக ஊடகங்கள் ஊடாக பொய்யான, அவதூறான மற்றும் துஷ்பிரயோகமான தகவல்களை பரப்பியதாக குற்றஞ்சாட்டப்பட்டு மாத்தளை மாவட்ட ஐக்கிய மக்கள்...

கண்டி ஹோட்டல்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்படும்

கண்டியில் இஸ்ரேலியர்கள் தங்கியுள்ள சுற்றுலா விடுதிகளுக்கு பொலிஸார் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். மேலும், கண்டியில் உள்ள சுற்றுலா விடுதிகளில்...

கொழும்பு, வன்னி தபால் வாக்கு பாதுகாப்பு பொதிகள் இன்று அனுப்பப்படும்

பாராளுமன்றத் தேர்தலுக்கான கொழும்பு மற்றும் வன்னி ஆகிய இரண்டு தேர்தல் மாவட்டங்களிலும் தபால் வாக்குகள் அடங்கிய பாதுகாப்பு பொதிகளை...