உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி எதிர்வரும் 24-ஆம் திகதி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. அதற்கு முன் இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது. அதன்படி இந்தியா முதல் பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்தை எதிர்கொண்டது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 188 ஓட்டங்கள் எடுத்தது.
இந்நிலையில் 189 என்ற வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 19வது ஓவரில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 192 ரன்கள் குவித்து வெற்றிபெற்றது.
இதன் மூலம் முதல் பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அணி வெற்றி பெற்றது.