follow the truth

follow the truth

September, 20, 2024
HomeTOP1மஹிந்தவை பிரதமராக்க மனோ விருப்பமாம்

மஹிந்தவை பிரதமராக்க மனோ விருப்பமாம்

Published on

மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமராக நியமிப்பது பிரச்சினை இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

பதவிகளுக்கான நியமனங்கள் எவ்வாறாயினும், பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் இதனை தெரிவித்துள்ளார்.

“..நாட்டில் இந்நாட்களில் கதைக்கப்படும் பெரிய புராணம் தான் மஹிந்த ராஜபக்ஷ தனக்கு பிரதமர் பதவியை கோருகின்றமை. அதும் எமது ஜனாதிபதியிடம் கோருகிறாராம். நாமும் சொல்கிறோம், தயவு செய்து அதனை முதலில் செய்யுங்கள். அதில் எமக்கு பிரச்சினைகள் இல்லை. நாம் ஆட்சிக்கு வருவோம். மக்கள் ஆணை யாருக்குள்ளது என நாடே அறிந்து கொள்ளட்டும்..” எனத் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும் பணிகள் நாளை காலை முதல் ஆரம்பிக்கப்படும்...

உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை

ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த...

ஜனாதிபதித் தேர்தல் – பாதுகாப்பிற்காக முப்படைகளும் இணக்கம்

ஜனாதிபதித் தேர்தலின் போது அமுல்படுத்தப்பட வேண்டிய இறுதி பாதுகாப்பு வேலைத்திட்டம் பொலிஸ்மா அதிபர்களுக்கு இன்று (19) வழங்கப்பட்டதாக பொது...