இலங்கை நீர்கொழும்புக்கு அண்மித்த கடல்பகுதியில் மூழ்கிய எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் பாகங்களை அகற்றும் நடவடிக்கை இம்மாத இறுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
அவுஸ்திரேலியா நிறுவனம் ஒன்றின் ஒத்துழைப்புடன் இந்த பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஜூன் மாதம் சிங்கபூர் நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் இலங்கை கடற்பரப்பில் வைத்து தீ விபத்துக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது