follow the truth

follow the truth

October, 24, 2024
HomeTOP1இன்று 10 மணி நேரம் நீர் வெட்டு

இன்று 10 மணி நேரம் நீர் வெட்டு

Published on

கொலன்னாவ மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளுக்கு இன்று (08) 10 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை கொலன்னாவ நகரசபை, மொரகஸ்முல்ல, ராஜகிரிய, ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர, எத்துல்கோட்டே, நாவல, கொஸ்வத்தை, ராஜகிரிய முதல் நாவல திறந்த பல்கலைக்கழகம் வரையான பிரதான வீதி மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து பக்க வீதிகளிலும் நீர் விநியோகம் தடைப்படும்.

லங்கா மின்சார தனியார் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படும் பராமரிப்புப் பணிகள் காரணமாக கொலன்னாவ நீரேற்று நிலையத்திற்கான மின்சார விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதால் நீர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

நீர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதால், அந்தந்த பகுதிகளில் உள்ள பொதுமக்களை தேவைக்கேற்ப தண்ணீரை சேகரிக்குமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கேட்டுக் கொண்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இஸ்ரேலிய பிரஜைகள் மீதான தாக்குதல் திட்டம் – இருவர் கைது

இலங்கையில் உள்ள இஸ்ரேலிய பிரஜைகள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக, சந்தேகத்தின் பேரில் இருவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால்...

கடையொன்றில் தீப்பரவல் – மஹவெவ வீதிக்கு பூட்டு

மஹவெவ பகுதியில் கடையொன்றில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக சிலாபம் - கொழும்பு பிரதான மார்க்கம் மஹவெவ பகுதியில் மூடப்பட்டுள்ளதாக...

பாதுகாப்பு செயலாளரை சந்தித்த மாலைதீவு உயர்ஸ்தானிகர்

இலங்கைக்கான மாலைத்தீவு குடியரசின் உயர்ஸ்தானிகர் மசூத் இமாத் இன்று (23) கோட்டை ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில்...