நாடளாவிய ரீதியில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கு எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி இன்று பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேற்கு மற்றும் தென் மாகாணங்களிலும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையில் மழை பெய்யும் என திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இன்று காலை திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் வரையிலான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும், நாட்டின் ஏனைய பகுதிகளில் சில இடங்களில் 75 மி.மீ. மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.