follow the truth

follow the truth

September, 20, 2024
Homeபொலிட்டிக்கல் மேனியாரோசி இன்னும் மேயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில்..

ரோசி இன்னும் மேயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில்..

Published on

கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் ரோசி சேனாநாயக்க தொடர்ந்தும் மேயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் தங்கியுள்ளார்.

உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேற மேலும் இரண்டு மாதங்கள் அவகாசம் கேட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னதாக, மாநகரசபையின் உத்தியோகபூர்வ பதவிக்காலம் முடிவடைந்த பின்னர், மேயர் பயன்படுத்திய உத்தியோகபூர்வ இல்லத்தை ஒப்படைக்க ஒரு மாத கால அவகாசம் கோரப்பட்டிருந்தது.

ஆனால் அந்த காலத்தை மேலும் இரண்டு மாதங்களுக்கு நீடிக்குமாறு மேல் மாகாண ஆளுநரிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கு ஆளுநரின் ஒப்புதலும் கிடைத்துள்ளது.

இதேவேளை, கொழும்பு மாநகர ஆணையாளர் விடுத்துள்ள கடிதத்தில், மார்ச் 20ஆம் திகதி முதல் உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறும் நாள் வரையான காலப்பகுதிக்கான நீர், மின்சாரம், தொலைபேசி மற்றும் ஏனைய வசதிகளுக்கான கட்டணங்களை முன்னாள் மேயர் தனிப்பட்ட முறையில் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. .

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

துமிந்த சில்வாவின் விடுதலை பேச்சுவார்த்தை தோல்வி – பசில் நாட்டை விட்டு வெளியேறினார்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். இலங்கையின் பிரபல...

நோயிலிருந்து மீண்டு வரும் நிலையில் மருத்துவர்களை மாற்றப் போகிறீர்களா?

இந்த நாட்டு மக்களிடம் எந்த பொய்யை வேண்டுமானாலும் கூறி அவர்களின் மனதைவெல்ல முடியும் என ஜே.வி.பி நினைக்கிறதாக அமைச்சர்...

10 வருடங்களில் மீட்க முடியாது என்று சொல்லப்பட்ட நாட்டை இரண்டே ஆண்டுகளில் மீட்டெடுத்தார்

எனது 40 வருட அரசியலில் நான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிக்கவில்லை, வாக்களிப்பேன் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கவில்லை...