follow the truth

follow the truth

September, 17, 2024
Homeவிளையாட்டுகிண்ணத்தை தன்வசப்படுத்தியது சென்னை சுப்பர் கிங்ஸ்

கிண்ணத்தை தன்வசப்படுத்தியது சென்னை சுப்பர் கிங்ஸ்

Published on

14 ஆவது ஐபிஎல் தொடாின் இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை 27 ஓட்டங்களால் வென்ற சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 4 ஆவது தடவையாகவும் ஐபில் கிண்ணத்தை தனதாக்கியது.

துபாயில் இன்று இடம்பெற்ற 2021 ஐபிஎல் மாபெரும் இறுதிப்போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதின.

அதற்கமைய, நாணய சுழற்சியில் வென்ற கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி, முதல் களத்தடுப்பை தேர்வுசெய்ய, சென்னை சுப்பர் கிங்ஸ் முதலில் துடுப்பெடுத்தாடியது.

இந்நிலையில், சென்னை அணி 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 165 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.

அதன்படி 27 ஓட்டங்களால் இறுதிப் போட்டியில் வெற்றிபெற்ற சென்னை சுப்பர் கிங்ஸ் அணி சம்பியனானது.

இதுவரையில், ஐபில் தொடர்களில் 9 முறை இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ள சென்னை அணி இம்முறையுடன் சேர்த்து மொத்தமாக 4 தடவைகள் ஐபிஎல் கிண்ணத்தை வென்றுள்ளது.

இதேவேளை மூன்று முறை ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற கொல்கத்தா அணி இரண்டு தடவைகள் சம்பியனாகியுள்ளது.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ICC ஆகஸ்ட் மாதத்தின் சிறந்த வீராங்கனை ஹர்ஷிதா

சர்வதேச கிரிக்கெட் சபை (ஐசிசி) ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையைத் தெரிவு செய்து கௌரவித்து வருகிறது....

நியூசிலாந்துக்கு எதிரான இலங்கை டெஸ்ட் குழாம்

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த...

இலங்கை vs நியூசிலாந்து முதல் டெஸ்ட் போட்டியை இலவசமாக பார்க்கும் வாய்ப்பு

சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் எதிர்வரும் செப்டம்பர் 18ஆம் திகதி...