follow the truth

follow the truth

September, 20, 2024
HomeTOP1உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : அநுரவை பகிரங்க விவாதத்திற்கு அழைக்கும் லன்சா

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : அநுரவை பகிரங்க விவாதத்திற்கு அழைக்கும் லன்சா

Published on

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பகிரங்க விவாதத்திற்கு அநுர குமாரவை அல்லது விஜித ஹேரத்தினை தான் அழைப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா இன்று பாராளுமன்ற உரையில் தெரிவித்திருந்தார்.

அவர் தொடர்ந்தும் இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில்;

“.. கடந்த ஏப்ரல் 21ம் திகதி நீர் கொழும்பினை சுற்றிவளைப்பது குறித்து மக்கள் விடுதலை முன்னணி சார்பில் அநுர குமார தலைமையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று நான்கு வருடங்கள் கடந்த நிலையில் அநுர குமார எம்பி நீர்கொழும்பினை சுற்றிவளைக்க போகிறார். இதை என்னவென்று கூறுவது?

இந்த உயரிய சபையில் நான் மிகவும் தெளிவாகக் கூறுகிறேன், அநுர குமார திசாநாயக்க நீர்கொழும்பை சுற்றிவளைக்கவல்ல செல்ல வேண்டும். அநுர குமார திசாநாயக்க இப்ராஹீம் நாநாவின் வீட்டை சுற்றிவளைக்கவே செல்ல வேண்டும். ஏனென்றால், இப்ராஹீம் நாநா மக்கள் விடுதலை முன்னணியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் இப்ராஹீம் நாநாவை விட்டு எமக்கு கதைக்க முடியாது. ஏனெனில் இப்ராஹீம் நாநா வின் மகன்கள் இருவரும், மருமகளும் தான் தற்கொலை தாக்குதலை நடாத்தி தற்கொலை செய்து கொண்டனர்.

அவ்வாறு இருக்க, தேசியப்பட்டியல் மூலம் உறுப்பினர் பதவியை வழங்கிய அநுர குமார திசாநாயக்க நீர்கொழும்புக்கு போய் கூறுகிறார், நீர் கொழும்பினை சுற்றிவளைக்க வேண்டுமாம். எதற்காக நீர்கொழும்பை சுற்றிவளைப்பது போய் இப்ராஹீம் வீட்டை சுற்றிவளைக்க வேண்டியது தானே..

தமிழ் – சிங்கள புத்தாண்டிற்கு பின்னர் கேள்விப்பட்ட ஜோக்குகளில் ஒன்று தான் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்து நான்கு வருடங்கள் கடந்த நிலையில் அநுர குமாரவின் நீர்கொழும்பு சுற்றிவளைப்பு.. உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு நீதி கோருகிறார்..

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கத்தோலிக்கர்களை கொலை செய்ததே இப்ராஹீமின் மகன்கள்.. கொலை செய்ததன் பின்னர் அவர்களின் தலைவர் போய் நகைச்சுவைகளை அடுக்கிக் கொண்டு இருக்கிறார். அவரது வெட்க நரம்புகள் துண்டிக்கப்பட்டா இருக்கின்றது?? இல்லை என்றால் வெட்கம் என்று ஒன்று இல்லையா?? நீர்கொழும்பு சென்று கத்தோலிக்க மக்கள் குறித்து கதைக்க துப்பில்லை.. குண்டு வெடித்தபோது அநுர குமார திசாநாயக்க கனடாவில் இருந்தார்.. ஐந்து நாட்கள் சென்று வந்திருந்தார்… நான் அமெரிக்காவில் இருந்தேன். நான் அன்றே நாடு திரும்பினேன், அநுர குமார ஐந்து நாட்களுக்கு பின்னரே வந்தார்.

மக்கள் பற்றிய அந்தளவுக்கு தேவை, வலி இருக்குமாயின் அன்றே வந்திருக்க வேண்டுமே.. வரவில்லையே.. ஆனால் இன்று போய் மரணித்த மக்களின் துன்பத்தினை கண்ணீரை விற்று அரசியல் செய்கிறார், அது தான் எமக்கிருக்கும் துக்கம்..

சும்மா சந்தி சந்தியாக கூடாமல் என்னுடன் விவாதத்திற்கு வாருங்கள்.. நான் அழைப்பு விடுக்கிறேன்.. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விவாதிக்க நான் பகிரங்க அழைப்பு விடுக்கிறேன். அநுர குமாரவிற்கு அல்லது விஜித ஹேரத்திற்கு… வேறு யாரிலும் வேலை இல்லை…”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும் பணிகள் நாளை காலை முதல் ஆரம்பிக்கப்படும்...

உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை

ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த...

ஜனாதிபதித் தேர்தல் – பாதுகாப்பிற்காக முப்படைகளும் இணக்கம்

ஜனாதிபதித் தேர்தலின் போது அமுல்படுத்தப்பட வேண்டிய இறுதி பாதுகாப்பு வேலைத்திட்டம் பொலிஸ்மா அதிபர்களுக்கு இன்று (19) வழங்கப்பட்டதாக பொது...