follow the truth

follow the truth

October, 22, 2024
Homeஉள்நாடுதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்த தீர்மானம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்த தீர்மானம்

Published on

மாகாண சபைத் தேர்தல்கள் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான சட்டமூலத்தை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தீர்மானித்துள்ளார்.

குறித்த சட்டமூலம் தனியார் சட்டமூலமாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒக்டோபர் 11, 2019 அன்று, மாகாண சபைத் தேர்தல்கள் சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம் தனிப்பட்ட உறுப்பினர் முன்மொழிவாக வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.

அதன்படி எதிர்வரும் 25ஆம் திகதி குறித்த தீர்மானத்தின் முதல் வாசிப்பு நடத்தப்பட உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இந்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் மாகாண சபைத் தேர்தலை முன்னைய வாக்களிப்பு முறையிலேயே நடாத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கையைத் திருத்துவதற்கு நடவடிக்கை

எதிர்வரும் பொதுத் தேர்தலினூடாக தமது தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணிக்கு அதிகாரம் கிடைக்கப்பெறுமானால், நாட்டிற்கு நன்மை ஏற்படும் வகையில்...

பல பகுதிகளில் தண்ணீர் விநியோகம் குறித்த அறிவிப்பு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு நீர் விநியோக குழாய் திடீரென உடைந்து விழுந்ததன் காரணமாக குறைந்த அழுத்தத்தில் நீர்...

தமிதா அபேரத்ன ஜனநாயக தேசிய கூட்டணியில்

பழம்பெரும் நடிகை தமிதா அபேரத்ன ஜனநாயக தேசிய கூட்டணியில் (Democratic National Alliance) இணைய தீர்மானித்துள்ளார். இன்று (21) இடம்பெற்ற...