நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள சுகாதாரக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதா? அல்லது இறுக்கப்படுத்துவதா? என்பது குறித்து இன்று தீர்மானிக்கப்படவுள்ளது.
இன்று கூடவுள்ள கொவிட் தடுப்பு செயலணிக்கூட்டத்தில் இதுதொடர்பான தீர்மானம் எடுக்கப்படும் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் கடந்த நாட்களில் பொதுமக்கள் சுகாதார அறிவுறுத்தல்களை கடைபிடிக்கும் விடயத்தில் திருப்திகரமாக நடந்துக் கொள்ளவில்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது நிலவுகின்ற பெருந்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம். ஆனால் பொதுமக்கள் பொறுப்பற்று நடந்துக் கொண்டால், மீண்டும் ஆபாயகரமான சூழல் உருவாகும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.