follow the truth

follow the truth

September, 29, 2024
HomeTOP1'நொச்சிமுனை தர்ஹா - சகவாழ்வின் கடைசிக் கோட்டை' ஆவணப்படம்

‘நொச்சிமுனை தர்ஹா – சகவாழ்வின் கடைசிக் கோட்டை’ ஆவணப்படம்

Published on

மட்டக்களப்பு கல்லடி-உப்போடை நொச்சிமுனையில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த முஸ்லிம்களுக்கும் தமிழ் மக்களுக்குமிடையிலான உறவினையும்1985 கலவர காலத்தின் போது நிகழ்ந்த முஸ்லிம்களின் வெளியேற்றத்தையும் பின்னணியாகக் கொண்ட ஆவணப்படம் ‘நொச்சிமுனை தர்ஹா – சகவாழ்வின் கடைசிக் கோட்டை’யின் தயாரிப்புப் பணிகள் நிறைவடைந்து, இம்மாதம் பொதுமக்களுக்காகக் காண்பிக்கப்படவுள்ளது.

எழுத்தாளரும் ஊடக, சமூக செயற்பாட்டாளருமான ஆத்மா ஜாபிர் இதனை எழுதி இயக்கியுள்ளார். ஏறத்தாழ 30 நிமிட கால அளவுள்ள இவ் ஆவணத் திரைப்படம், கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேலாக அவர் முன்னெடுத்த ஆராய்ச்சி, தேடல், உழைப்பின் அறுவடையாகும்.

இவ் இலவச திரைப்படக் காட்சி குறித்த மேலதிக விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். இவ் ஆவணப்படத்தின் first look poster, trailer ஆகியவை தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. ஆத்மா ஜாபிர் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர் மற்றும் திரைப்படத்துறை விரிவுரையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Nochchimunai Dharga – the final fort of co-existence

Documentary film

Written and directed by
Aathmaa Jafir

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாடசாலை நிகழ்வுகளுக்கு மாணவர்களிடம் பணம் அறவிட முடியாது

பாடசாலைகளில் இடம்பெறும் பல்வேறு கொண்டாட்டங்களுக்காக பெற்றோர்களிடமிருந்து பணம் அறவிடக்கூடாது என நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளின் அதிபர்களுக்கும்...

இன்று முதல் கட்டுப்பாட்டு விலையில் அரிசி விநியோகம்

அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலையின் கீழ் சந்தைக்கு அரிசியை விநியோகிக்க பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர். ஜனாதிபதி நாட்டிற்குள் முன்னெடுக்கும்...

புலமைப்பரிசில் வினாத்தாள் கசிவு – 7 பேர் கொண்ட குழு நியமிப்பு

தரம் 5 புலமைப்பரிசில் வினாத்தாள் விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்த விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. 7 நிபுணர்களைக் கொண்ட சுயாதீன...