உக்ரைனால் 6 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் மின்சாரத்தை ஏற்றுமதி செய்ய முடிந்தது.
கடந்த அக்டோபரில், ரஷ்ய தாக்குதல்களால், உக்ரைனின் எரிசக்தி விநியோகம் தடைபட்டது மற்றும் உக்ரைனின் பல நகரங்களில் மின்வெட்டு ஏற்பட்டது.
எனினும் மீண்டும் ஒருமுறை மின்சாரம் உபரியாக இருப்பதால் ஏற்றுமதி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக உக்ரைன் எரிசக்தி அமைச்சர் ஹெர்மன் ஹலுஷ்செங்கோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான உத்தரவில் கைச்சாத்திடவும் எரிசக்தி அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
மின்சாரம் ஏற்றுமதி மூலம் கிடைக்கும் வருமானம் சேதமடைந்த எரிசக்தி உள்கட்டமைப்பை மீண்டும் கட்டமைக்க பயன்படுத்தப்படும் என்று உக்ரைனின் எரிசக்தி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.