follow the truth

follow the truth

September, 20, 2024
Homeபொலிட்டிக்கல் மேனியாஅரச நிறுவனங்களது நீர் கட்டண நிலுவை 70 கோடி

அரச நிறுவனங்களது நீர் கட்டண நிலுவை 70 கோடி

Published on

ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்கள் குடிநீருக்காக எழுபது கோடி ரூபாய்க்கு மேல் நீர்வளம் மற்றும் வடிகால் சபைக்கு செலுத்த தவறியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், இம்மாதம் முதல் வாரத்தில் இருந்து நிலுவைத் தொகையை செலுத்தாத அனைத்து அரசு நிறுவனங்களின் கட்டணங்களுக்கும் 2.5 சதவீதம் கூடுதல் கட்டணம் (அபராதம்) வசூலிக்க குறித்த சபை தீர்மானித்துள்ளது.

நீண்ட காலமாக நிலுவையில் உள்ள கட்டண பட்டியல்களை செலுத்தப்படாத பொது நிறுவனங்களில் பெரும்பாலானவை பொலிஸ், இராணுவ முகாம்கள் மற்றும் மருத்துவமனைகள் ஆகும்.

கடந்த ஜனவரி மாதம் முதல் இந்த கூடுதல் கட்டணம் அறவிடப்படுவது குறித்து அனைத்து அரச நிறுவனங்களுக்கும் அறிவிக்கப்பட்டதாக நீர்வள மற்றும் வடிகாலமைப்புச் சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.

பொதுவாக, தண்ணீர் கட்டணம் 90 நாட்களுக்குள் செலுத்தப்படாவிட்டால், இந்த கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.

மேலும், தண்ணீர் கட்டணத்தை 14 நாட்களுக்குள் செலுத்தினால், 1.5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்றும், பொது நிறுவனங்கள் மற்றும் அனைத்து தனியார் குடிநீர் நுகர்வோருக்கும் பொதுவாக தள்ளுபடி கிடைக்கும் என்றும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

துமிந்த சில்வாவின் விடுதலை பேச்சுவார்த்தை தோல்வி – பசில் நாட்டை விட்டு வெளியேறினார்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். இலங்கையின் பிரபல...

நோயிலிருந்து மீண்டு வரும் நிலையில் மருத்துவர்களை மாற்றப் போகிறீர்களா?

இந்த நாட்டு மக்களிடம் எந்த பொய்யை வேண்டுமானாலும் கூறி அவர்களின் மனதைவெல்ல முடியும் என ஜே.வி.பி நினைக்கிறதாக அமைச்சர்...

10 வருடங்களில் மீட்க முடியாது என்று சொல்லப்பட்ட நாட்டை இரண்டே ஆண்டுகளில் மீட்டெடுத்தார்

எனது 40 வருட அரசியலில் நான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிக்கவில்லை, வாக்களிப்பேன் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கவில்லை...