மார்ச் மாதத்தில் ஒரு லட்சத்து 25,495 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தின் முதல் காலாண்டில் மூன்று இலட்சத்து 35,679 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக அதன் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.
இந்த வருட இறுதிக்குள் 2 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவார்கள் என எதிர்பார்க்க முடியும் என சுற்றுலா ஊக்குவிப்பு அதிகார சபையின் தலைவர் மேலும் தெரிவித்தார்.