follow the truth

follow the truth

September, 19, 2024
Homeஉள்நாடுபண்டிகை காலங்களில் ரயில் சேவைகள் தடைப்படும் சாத்தியம்

பண்டிகை காலங்களில் ரயில் சேவைகள் தடைப்படும் சாத்தியம்

Published on

எதிர்வரும் சிங்கள, தமிழ் புத்தாண்டுக்கான விசேட பஸ் சேவை ஏப்ரல் 7ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் போக்குவரத்து வசதிகளை எவ்வித பிரச்சினையும் இன்றி வழங்குவதற்கு ஏற்கனவே ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

அதற்குத் தேவையான திட்டங்கள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதாக அதன் இயங்கும் பிரிவின் பிரதிப் பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹன்ச தெரிவித்தார்.

இதேவேளை, பண்டிகை காலத்துக்கு தேவையான போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், பண்டிகைக் காலங்களில் விசேட ரயில் சேவைகளை நடத்துவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போதைய புகையிரத சாரதிகள் பற்றாக்குறை மற்றும் பணிபுரியும் சாரதிகள் விடுமுறை கோருவதால் புத்தாண்டு காலத்தில் புகையிரத சேவை தடைபடும் அபாயம் உள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்கெடுப்பு, வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் செய்யக்கூடாதவை

வாக்கெடுப்பு நிலையங்களுக்குள் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் தடை விதிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவினால் முக்கிய அறிவித்தல் ஒன்று...

விசேட தேவையுடையவர்களுக்கு வாக்களிப்பு நிலையங்களில் சிறப்பு ஏற்பாடுகள்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் விசேட தேவையுடையவர்கள் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ...

வாக்களிக்கச் செல்பவர்களுக்காக விசேட பஸ் சேவை

ஜனாதிபதித் தேர்தலுக்கு வாக்களிக்கச் செல்லும் பயணிகளுக்காக இலங்கை போக்குவரத்துச் சபை விசேட பஸ் சேவையொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது. வாக்களிப்பதற்காக கிராமங்களுக்குச்...