விமான எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக 35,000 மெட்ரிக் தொன் எரிபொருளை சேமிப்பதற்கான களஞ்சியசாலையை நிறுவுவதற்கு தனியார் துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
இதேவேளை, சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக, வருகை முனையத்தில் குடியேற்ற சாளரங்கள் 25 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், நாட்டிற்கு விசா பெறுவதற்கு தற்போதுள்ள இரண்டு சாளரங்களுக்கு மேலதிகமாக இரண்டு புதிய சாளரங்கள் நிறுவப்பட்டுள்ளன.