கொழும்பில் உள்ள அனைத்து கல்வி வலயங்களிலும் இம்முறை க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் மற்றும் ஒரு தடவை மாத்திரம் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் பைஸர் தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இம்முறை உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் தமது அடையாள அட்டையை சமர்பித்து தடுப்பூசி பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.