கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அஸாத் சாலியை எதிர்வரும் 25ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் சிறைச்சாலை கண்காணிப்பாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அஸாத் சாலியின் சாரிபில் ஆஜராகியுள்ள ஜனாதிபதி சட்டத்தரணி மைத்ரி குணரத்னவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் அடிப்படையிலேயே மேல் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.