follow the truth

follow the truth

March, 15, 2025
Homeஉள்நாடுகொழும்பிற்கு பயணிக்கும் வாகன சாரதிகளுக்கான அறிவித்தல்

கொழும்பிற்கு பயணிக்கும் வாகன சாரதிகளுக்கான அறிவித்தல்

Published on

புதிய களனி பாலத்தில் இறுதிக்கட்ட கட்டுமான பணிகள் காரணமாக ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மாற்று வீதிகளை பயன்படுத்தமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

களனி பாலத்தில் கட்டுமான பணிகள் காரணமாக பேஸ்லைக் வீதி மற்றும் துறைமுக நுழைவு வீதி ஆகிய பகுதிகளில் காலை மற்றும் மாலை வேலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய, பின்வரும் வீதிகளை பயன்படுத்தி, போக்குவரத்து நெரிசலை குறைத்துக்கொள்ளுமாறு பொதுமக்கள் மற்றும் சாரதிகளிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கண்டி வீதியினூடாக கொழும்புக்கு பிரவேசிக்கும் வாகனங்கள் பேஸ்லைன் வீதியில் பயணிக்காமல், நவலோக்க சுற்றிவட்டத்தின் ஊடாக தொட்டலங்க சந்தி, ப்ரின்ஸ் ஒஃப் வேல்ஸ் வீதி அல்லது ப்ளூமெண்டல் வீதியினூடாக கொழும்புக்கு பிரவேசிக்க முடியும்.

நீர்கொழும்பு வீதியினூடாக வருகைதரும் வாகனங்கள் கதிரான பாலம், அளுத்மாவத்தை வழியாக கொழும்புக்கு பிரவேசிக்க முடியும்.

பழைய அவிசாவளை வீதியினூடாக வருகைதரும் வாகனங்கள் ஸ்டேஸ் வீதி, கொஸ்கஸ் சந்தி, லேயார்ட்ஸ் ப்ரோட்வே (Lyards Broadway_) வீதியினூடாக ப்ரின்ஸ் ஒஃப் வேல்ஸ் வீதி (Prince of Wales Avenue) ஊடாக பிரவேசிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் நிகழ்வு

முஸ்லிம்களின் புனித ரமழான் நோன்பு மாதத்தையிட்டு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் இப்தார் நிகழ்வு இன்று (14)...

அம்பலாங்கொடை துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

அம்பலாங்கொடை இடம்தொட்ட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் அம்பலாங்கொடை, இடம்தோட்டை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர்...

மாணவர்களுக்கு வழங்கப்படும் 6,000 ரூபா வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

பாடசாலை மாணவர்களுக்கு உபகரணம் பெற்றுக் கொள்வதற்காக வழங்கப்பட்டுள்ள 6000 ரூபா வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் மார்ச் 31 ஆம்...