ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் அதிபர், ஆசிரியர்களின் சம்பள பிரச்சினை தொடர்பில் அனைவரும் கலந்துரையாடி இறுதி தீர்மானம் எடுக்க வேண்டும் என ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
சுபோதனி குழுவின் அறிக்கை வர வேண்டும் எனவும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க யாருக்கும் உரிமை இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளை ஆரம்பிக்க இன்னும் 7 நாட்கள் இருப்பதால் கலந்துரையாடி உடனடியாக முடிவு ஒன்றை எடுக்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்.