follow the truth

follow the truth

September, 21, 2024
Homeஉள்நாடுசீனி கட்டுப்பாட்டை மீறிவிட்டது

சீனி கட்டுப்பாட்டை மீறிவிட்டது

Published on

கட்டுப்பாட்டு விலையை விட அதிகமாக வியாபாரிகள் சீனி விற்பனை செய்வதாக மக்கள் நுகர்வோர் விவகார ஆணையகத்திடம் முறைப்பாடு செய்துள்ளனர்
தெரிவித்துள்ளனர்.

தற்போது கொழும்பில் மொத்த விலை 130 ரூபாய் என்றும் சில்லறை விலை நேற்று (12) வரை 138 ரூபாயாக உயர்ந்துள்ளது
என்று கோட்டை மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

நுகர்வோர் விவகார ஆணையகம் செப்டம்பர் 2 ஆம் திகதி வெளியிட்ட கட்டுப்பாட்டு விலை வர்த்தமானி அறிவிப்பின்படி வெள்ளைச் சீனியின்
சில்லறை விலை 122 ரூபாய் மற்றும் ஒரு கிலோ பக்கெட் செய்யப்பட்ட வெள்ளை சீனியின் சில்லறை விலை 125 ரூபாய் ஆகும்.

சீனி இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டாலும் டொலர்கள் பற்றாக்குறையால் சீனி இறக்குமதி செய்ய முடியவில்லை என்று இறக்குமதியாளர்கள்
கூறுகின்றனர்.

இறக்குமதியாளர்கள் உலக சந்தையில் ஒரு மெட்ரிக் டொன் சீனியின் விலை 550 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளதாகவும் அதன்
விளைவாக ஒரு கிலோ சீனி துறைமுகத்தில் இருந்து 116 ரூபாய்க்கு வெளியிடப்படுவதாகவும் சுட்டிக் காட்டுகின்றனர்.

மேலும் சீனி இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட 25 சதவீத வரியும் இன்று (13) முதல் இரத்து செய்யப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – மூவர் பணி நீக்கம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளை புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் மூலம் பகிர்ந்த சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் ரத்மலே...

கொழும்பில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் காச நோயாளர்களின் எண்ணிக்கை 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக காசநோய் கட்டுப்பாடு மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய...

ரயில் சேவைகளில் மாற்றம் இல்லை

ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெறும் நாளைய தினம் ரயில் சேவைகள் வழமைப் போன்று இடம்பெறுமென ரயில்வே பிரதி பொதுமுகாமையாளர்...