அரசாங்க நிதி தொடர்பான குழு இன்று (21) மீண்டும் கூடவுள்ளது.
அரசாங்க நிதி தொடர்பான குழு நேற்று தற்காலிக தலைவர் ஒருவரின் கீழ் கூடி நிறைவேற்ற முடியாத சில சட்டமூலங்களை இன்று மீள்பரிசீலனை செய்ய தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, 09வது பாராளுமன்றத்தின் நான்காவது அமர்விற்கான பொது மனுக்கள் மீதான குழு இன்று முதல் தடவையாக கூடவுள்ளது.
அங்கு புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார்.
இதேவேளை, பாராளுமன்றம் இன்று காலை 09.30 மணிக்கு மீண்டும் கூடவுள்ளது.
சட்டக் கல்வி மற்றும் அவசரச் சட்டத்தின் கீழ் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள விதிகள் விவாதம் இன்றி இன்று ஏற்றுக்கொள்ளப்பட உள்ளன.
அதுமட்டுமின்றி, கனிம வள சட்டத்தின் கீழ் மின்துறை அமைச்சர் சமர்ப்பித்த உத்தரவுகள் மீதான விவாதமும் இன்று நடைபெற உள்ளது.