மேல் மாகாணத்தில் வாகன வருமான வரி அனுமதி பத்திரங்களை வழங்கும் நடவடிக்கை இன்று (13) முதல் இரண்டு வாரத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வாகன வருமான வரி அனுமதிப்பத்திரங்களை வெளியிடும் கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கணினி கட்டமைப்பை வழமைக்கு கொண்டு வரும் வரை தற்காலிகமாக மேல் மாகாணத்தில் வாகன அனுமதி பத்திரங்களை வழங்கும் நடவடிக்கை இன்று முதல் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை இடை நிறுத்தப்படும்.
இதேவேளை, நேற்று முதல் காலாவதியாகும் வாகன அனுமதிப் பத்திரங்களை வழங்கும் நடவடிக்கையும், டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் பெறவேண்டிய அனுமதி பத்திரங்களும் இம்மாதம் 27 ஆம் திகதி முதல் பல இடங்களில் வழங்கப்படும்.
மேல் மாகாண மோட்டார் வாகன திணைக்களம், களுத்துறை கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களின் பிரதேச செயலகங்கள் ஆகிய இடங்களில் இந்த நடவடிக்கை இடம்பெறும் என மேல் மாகாண ஆளுநர் அலுவலகம் அறிவித்துள்ளது.