பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பதவியில் இருந்து நீல் பண்டார ஹபுஹின்ன நீக்கப்பட்டு ஜனாதிபதி அலுவலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
இன்று (20) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் பதில் செயலாளராக ரஞ்சித் அசோக நியமிக்கப்பட்டுள்ளார்.
இது வரை ரஞ்சித் அசோக அமைச்சின் மேலதிக செயலாளராக பதவி வகித்து வந்தார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான பிணைப் பணத்தை பெற்றுக் கொள்ள வேண்டாம் என நீல் பண்டார மாவட்ட செயலாளர்களுக்கு அனுப்பிய கடிதம் தொடர்பில் பல தரப்பினரும் குற்றம் சுமத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.