follow the truth

follow the truth

February, 5, 2025
Homeஉள்நாடுஅழைப்பாணை பிறப்பித்தல் நடைமுறையில் மாற்றம்

அழைப்பாணை பிறப்பித்தல் நடைமுறையில் மாற்றம்

Published on

அழைப்பாணை பிறப்பித்தல் மற்றும் வழங்கல் தொடர்பாகத் தற்போது காணப்படும் நடைமுறைகளில் திருத்தம் மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அழைப்பாணை தொடர்பான சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக நீதி அமைச்சரால் நியமிக்கப்பட்டுள்ள குடியியல் சட்டத் திருத்தங்கள் தொடர்பான குழு இதற்கான பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.

அதற்கமைய, வழக்கொன்றின் தரப்பினர்களுக்கு அழைப்பாணை அனுப்பும்போது மின்னஞ்சல் மற்றும் கைப்பேசி குறுஞ்செய்தி போன்ற சமகாலத்தில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் தொடர்பாடல் வழிமுறைகளைப் பயன்படுத்துவது தொடர்பிலும் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய, குறித்த குழு பரிந்துரைத்துள்ள திருத்தங்களை உள்ளடக்கிக் குடியியல் வழக்குக் கோவை திருத்தம் செய்வதற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்கு நீதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அடுத்த வாரம் டுபாய் செல்கிறார் ஜனாதிபதி

2025 உலக அரசு உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 10 ஆம் திகதி முதல்...

ஜப்பான் கடன் ஒப்பந்தங்களை திருத்த அமைச்சரவை அனுமதி

வெளிநாட்டுக் கடன் மீள்கட்டமைப்புச் செயன்முறைக்கமைய இலங்கை அரசுக்கும், ஜப்பான் அரசுக்கும் இடையிலான பரிமாற்றுப் பத்திரம் மற்றும் இலங்கை அரசுக்கும்...

இலங்கையின் பிரச்சினைகளை தீர்க்க ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவு

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை நிரந்தர வதிவிட இணைப்பாளர் மார்க் அண்ட்ரே பிரஞ்சே (Marc-Andre Franche) மற்றும் பிரதமர்...