follow the truth

follow the truth

February, 6, 2025
HomeTOP1விவசாயிகள் மீது காரை ஏற்றி 9 பேர் பலி : மத்திய அமைச்சர் மகன் ஆசிஷ்மிஸ்ரா...

விவசாயிகள் மீது காரை ஏற்றி 9 பேர் பலி : மத்திய அமைச்சர் மகன் ஆசிஷ்மிஸ்ரா கைது

Published on

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்புரில் விவசாயிகள் மீது காரை ஏற்றி 4 பேர் உயிரிழக்கக் காரணமாக இருந்த மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ்மிஸ்ராவிடம் 12 மணி நேரம் விசாரணை நடத்திய பின்னர் பொலிசார் கைது செய்தனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்புர் கேரியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை விவசாயிகள் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த போது, மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவின் கார் விவசாயிகள் கூட்டத்தில் மோதியது. இதைத் தொடர்ந்து நிகழ்ந்த வன்முறையில் 4 விவசாயிகள் உள்பட 9 பேர் பலியாயினர்.

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இச்சம்பவத்தை கண்டித்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. ஆசிஷ் மிஸ்ரா மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் 2 பேர் மட்டும் கடந்த வியாழன் கைது செய்யப்பட்டனர்.

இந்த விவகாரத்தில் ஆசிஷ் மிஸ்ரா இன்னும் கைது செய்யப்படாமல் இருப்பதற்கு உச்சநீதிமன்றம் கடுமை காட்டியதைத் தொடர்ந்து, விசாரணைக்கு ஆஜராக ஆசிஷ்மிஸ்ராவுக்கு 2 ஆவது முறையாக சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி நேற்று காலை 11 மணிக்கு ஆஜரான அசிஷ் மிஸ்ராவிடம் போலீசார் இரவு 11 மணி வரை சுமார் 12 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

சில கேள்விகளுக்கு பதில் அளிக்காததுடன், விசாரணைக்கு ஒத்துழைப்பும் அளிக்காததால் அசிஷ் மிஸ்ராவை கைது செய்துள்ளதாக டிஐஜி உபேந்திர அகர்வால் தெரிவித்தார். பின்னர் நீதிபதி முன், ஆசிஷ் மிஸ்ரா ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

திமுத் கருணாரத்னே 100வது டெஸ்ட் போட்டிக்குப் பிறகு குடும்பத்துடன் ஆஸ்திரேலியாவுக்கு

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், மூத்த தொடக்க பேட்ஸ்மேனுமான திமுத் கருணாரத்ன சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக...

வெளிநாட்டு உப்பு இன்று முதல் சந்தைக்கு

இறக்குமதி செய்யப்பட்ட உப்பு இன்று (06) முதல் சந்தைக்கு வெளியிடப்படும் என்று ஹம்பாந்தோட்டை லங்கா உப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி,...

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது. காலியில் இன்று முற்பகல் 10...