உலக தபால் தினத்தை முன்னிட்டு மூன்று பிரிவுகளின் கீழ் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இன்று முத்திரைகள் வெளியிடப்பட்டுள்ளன.
உலக தபால் தின முத்திரை, நிரந்தர பிரிவின் கீழ் 1,000 ரூபா பெறுமதியான முத்திரை மற்றும் இலங்கையின் உள்ளூர் பறவைகளை உள்ளடக்கும் வகையிலான முத்திரை தொகுப்பு என்பன இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளன.
வெகுசன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெருமவினால் குறித்த முத்திரைகள், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
உலக தபால் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட உலக தபால் தின நினைவு முத்திரையானது, கொவிட்19 தொற்று நிலைமைக்கு மத்தியிலும் நாட்டின் தபால் சேவை சர்வதேச ரீதியில் செயற்பட்டு வருகின்றமையை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.