follow the truth

follow the truth

September, 21, 2024
Homeபொலிட்டிக்கல் மேனியாஎதிர்வரும் வாரத்தில் இந்தியாவிற்கு பயங்கர நிலநடுக்கம்..?

எதிர்வரும் வாரத்தில் இந்தியாவிற்கு பயங்கர நிலநடுக்கம்..?

Published on

எதிர்வரும் வாரத்தில் இந்தியாவின் ஹிம்ச்சல் – உத்தரகண்ட் மாநிலங்களில் கடுமையான நிலநடுக்கம் ஏற்படும் என இந்திய நிலநடுக்க ஆராய்ச்சி நிறுவனத்தின் (National Geophysical Research Institute (NGRI)) தலைவர் பூர்ணசந்திர ராதி (N Purnachandra Rao) இந்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை விட இது ரிக்டர் அளவுகோலில் எட்டு என விவரிக்க முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பூர்ணசந்திர ராதி மேலும் கூறுகையில்;

“.. உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்படும் நிலநடுக்கங்கள் மிகப் பெரியவை. மாநிலத்தில் நிறுவப்பட்டுள்ள 18 நிலநடுக்க ஆய்வு மையங்கள் மூலம் நிலநடுக்க கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். இந்த மாநிலத்தில் பல கட்டிடங்கள் நிலத்தடியில் கட்டப்பட்டுள்ளன. இந்தியாவில் பூமியின் மேற்பரப்பு ஆண்டுக்கு ஐந்து சென்டிமீட்டர் வேகத்தில் நகர்கிறது. ஹிம்சலுக்கும் நேபாளத்துக்கும் இடையிலான பிளவு நிலநடுக்கங்களுக்கு வழிவகுக்கும்..” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ‘பூர்ணசந்திர ராதி’ சர்வதேச செய்திப் பிரிவுக்கு வழங்கிய முழுமையான செவ்வியைக் காண இங்கே அழுத்தவும்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மொட்டுக் கட்சி உறுப்பினர்கள் மூவர் கட்சியிலிருந்து நீக்கம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு அந்த கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, அனுராதபுரம்...

துமிந்த சில்வாவின் விடுதலை பேச்சுவார்த்தை தோல்வி – பசில் நாட்டை விட்டு வெளியேறினார்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். இலங்கையின் பிரபல...

நோயிலிருந்து மீண்டு வரும் நிலையில் மருத்துவர்களை மாற்றப் போகிறீர்களா?

இந்த நாட்டு மக்களிடம் எந்த பொய்யை வேண்டுமானாலும் கூறி அவர்களின் மனதைவெல்ல முடியும் என ஜே.வி.பி நினைக்கிறதாக அமைச்சர்...