follow the truth

follow the truth

September, 21, 2024
Homeபொலிட்டிக்கல் மேனியாசிபெட்கோ கணக்கை மக்கள் வங்கி இடைநிறுத்தியது

சிபெட்கோ கணக்கை மக்கள் வங்கி இடைநிறுத்தியது

Published on

எண்ணெய் கூட்டுத்தாபனத்திடம் இருந்து எரிபொருள் பங்குகளை கொள்வனவு செய்வதற்காக விநியோகஸ்தர்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட கணக்கை மக்கள் வங்கி இடைநிறுத்தியுள்ளதாக பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்றிரவு முதல் இந்தக் கணக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் சங்கம் கூறுகிறது.

தற்போதைய சூழ்நிலை காரணமாக பணம் செலுத்திய விநியோகஸ்தர்கள் எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் எண்ணெய் கூட்டுத்தாபனத்துடனும், மக்கள் வங்கியுடனும் கலந்துரையாடி தீர்வினை பெற்று வருவதாகவும் குறிப்பிடுகின்றனர்.

மக்கள் வங்கியின் கணக்கில் பணத்தை வைப்பிலிடும் விநியோகஸ்தர்களுக்கு எரிபொருள் விடுவிக்கப்படாது என எண்ணெய் கூட்டுத்தாபனம் சில பகுதிகளில் உள்ள விநியோகஸ்தர்களுக்கு அறிவித்துள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மொட்டுக் கட்சி உறுப்பினர்கள் மூவர் கட்சியிலிருந்து நீக்கம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு அந்த கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, அனுராதபுரம்...

துமிந்த சில்வாவின் விடுதலை பேச்சுவார்த்தை தோல்வி – பசில் நாட்டை விட்டு வெளியேறினார்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். இலங்கையின் பிரபல...

நோயிலிருந்து மீண்டு வரும் நிலையில் மருத்துவர்களை மாற்றப் போகிறீர்களா?

இந்த நாட்டு மக்களிடம் எந்த பொய்யை வேண்டுமானாலும் கூறி அவர்களின் மனதைவெல்ல முடியும் என ஜே.வி.பி நினைக்கிறதாக அமைச்சர்...