follow the truth

follow the truth

September, 20, 2024
Homeபொலிட்டிக்கல் மேனியாஊழல்வாதிகளை துரத்துவதற்கான போராட்டம் தொடர்ந்தும்..

ஊழல்வாதிகளை துரத்துவதற்கான போராட்டம் தொடர்ந்தும்..

Published on

அரசாங்கத்தின் தன்னிச்சையான நடவடிக்கைகளால், ஊழல்வாதிகளை வீதிக்கு விரட்டும் போராட்டத்தை அவர்களது கட்சிகள் கொண்டு வரும் என தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மேயர் வேட்பாளர் வ்ரை கெளி பல்தாசர் (Vraie Cally Balthazaar) மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மேயர் வேட்பாளர் முஜிபுர் ரஹ்மான் டெய்லி சிலோன் செய்திப் பிரிவுக்கு தெரிவித்திருந்தனர்.

மேலும் கருத்துத் தெரிவித்த தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மேயர் வேட்பாளர் பல்தாசர், பொதுத் தேர்தலில் வெற்றிபெறும் வரை தமது கட்சி எதிர்பார்க்கும் போராட்டம் தொடரும் என்றார். பொதுத் தேர்தலின் மூலம் ஊழல்வாதிகளை உண்மையாகவே விரட்டியடிக்க முடியும் என சுட்டிக்காட்டிய அவர், வீதிகளில் இறங்கி போராடுவதுடன், ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க நீதிமன்றம் செல்லவும் தேசிய மக்கள் சக்தி திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

டெய்லி சிலோன் செய்திப் பிரிவுக்கு கருத்துத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மேயர் வேட்பாளர் முஜிபுர் ரஹ்மான்
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இலங்கை முழுவதும் ஊழல்வாதிகளை விரட்டும் போராட்டம் தொடங்கும். தேர்தலுக்கு இடையூறு செய்யக்கூடாது என அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், அது நாளை (17) விசாரிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நோயிலிருந்து மீண்டு வரும் நிலையில் மருத்துவர்களை மாற்றப் போகிறீர்களா?

இந்த நாட்டு மக்களிடம் எந்த பொய்யை வேண்டுமானாலும் கூறி அவர்களின் மனதைவெல்ல முடியும் என ஜே.வி.பி நினைக்கிறதாக அமைச்சர்...

10 வருடங்களில் மீட்க முடியாது என்று சொல்லப்பட்ட நாட்டை இரண்டே ஆண்டுகளில் மீட்டெடுத்தார்

எனது 40 வருட அரசியலில் நான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிக்கவில்லை, வாக்களிப்பேன் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கவில்லை...

06 மாதங்களில் போதைப் பொருள் விநியோகத்தை நிறுத்துவோம்

புலனாய்வுத் துறை அறிக்கையின் பிரகாரம் 20 இலட்சம் மேலதிக வாக்குகளால் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெறும். காலை...